திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக கீழ்வரும் விவரங்கள்படி காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்தகால அடிப்படையில் தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: மருத்துவ அலுவலர் - 02
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.75,000
பதவி: செவிலியர் - 02
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் மிட்வைஸ் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,000
பதவி: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் - 02
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.6,000
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை
விண்ணப்பிக்கும் முறை: http://www.samayapurammariammantemple.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621 112
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மருத்துவத்துறையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.11.2021