கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் அற்புத கீரை

ரத்தம் குறைவாக உள்ளவர்கள் இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்துவந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 2:02 pm IST

தேவையான பொருட்கள்

பாலக் கீரை   -   ஒரு கட்டு

மிளகு        -  தேவையான அளவு

பூண்டு        -   15  பல்

மஞ்சள் தூள்   -  சிறிதளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு பாலக் கீரையை எடுத்து சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டை ஒன்றிரண்டாக சிதைத்துக் கொள்ளவும். ஒரு இட்லி பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாலக் கீரை, மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் பூண்டுப் பல் சேர்த்து நீராவியில் வேக வைக்கவும்.

ஒரு வாணலியில் நீராவியில் வேகவைத்த பாலக் கீரையைப் போட்டு நன்கு கலக்கி  ஒரு வேளை உணவாக சாப்பிடவும்.
 
தீரும் குறைபாடுகள்

ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவக் கூடியது.

சாப்பிடும் முறை

ரத்த உற்பத்தி குறைவாக உள்ளவர்கள் மேற்கூறிய முறையில்  பாலக் கீரையை வேகவைத்து ஒருவேளை உணவாக உட்கொண்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.