தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க மனைவியைச் சுட்டுக் கொன்ற கணவன்: கூலிப்படை நாடகம் அம்பலம்!    

கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க மனைவியைச் சுட்டுக் கொன்று விட்டு, கூலிப்படையினரால் அவள் கொல்லப்பட்டதாக கணவன் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2017, 7:29 am

IANS

புதுதில்லி: கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க மனைவியைச் சுட்டுக் கொன்று விட்டு, கூலிப்படையினரால் அவள் கொல்லப்பட்டதாக கணவன் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

தில்லியின் பகர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பங்கஜ் மெஹ்ரா. இவரது மனைவி ப்ரியா மெஹ்ரா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் தங்களது காரில் செவ்வாய் இரவு ஷாலிமர் பாக் என்னும் பகுதியில் உள்ள சீக்கிய குருத்துவரா ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பொழுது, அடையாளம் தெரியாத நபர்களால் ப்ரியா சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் அதிர்ஷ்டவசமாக பங்கஜும் , அவரது இரண்டு வயது மகனும் தப்பி விட்டனர்.

ஆனால் ப்ரியா மருத்துவமனையில் இறந்தே கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் மருத்துவமனை மற்றும் போலீசாரின் அலட்சியத்தால் ப்ரியா உயிர் இழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மருத்துவமனையில் ப்ரியா அனுமதிக்கப்பட்ட பொழுது போலீசார் வந்த பின்னர்தான் சிகிச்சை அளிக்க  முடியும் என்று மருத்துவர்கள் காலம் தாழ்த்தினர் என்றும், அதே நேரத்தில் தங்களது எல்லை வரம்பிற்கு உட்படவில்லை என்று முதலில் போலீஸாரும் வர மறுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.       

பின்னர் ப்ரியாவின் கணவர் பங்கஜ்ஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது வியாபார வளர்ச்சிக்காக சிலரிடம் கடன் பெற்றிருந்ததாகவும், அதனை உரிய காலத்தில் திரும்பிச் செலுத்த தவறியதால் கடன் கொடுத்தவர்கள் கூலிப்படை மூலம் அவர் மீது நடத்த முயன்ற தாக்குதலில், ப்ரியா பலியாகி விட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தில்லி காவல்துறை இணை ஆணையர் மிலிந்த் மஹாதேவ் தும்ப்ரே இன்று காலை  செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

பங்கஜ் மெஹ்ரா தனது தொழில் வளர்ச்சிக்காக கடன் பெற்றுள்ளது உண்மைதான்.  ஆனால் அதனை திருப்பிச் செலுத்த இயலாத நிலையில், தனது மனைவியைக் கொன்று அந்தச் சந்தேகம் கடன் கொடுத்தவர்கள் மேல் விழ வைக்க எண்ணினார்.   அதற்காக திட்டம் தீட்டி இந்தச் செயலைச் செய்துள்ளார். அவருக்கு இன்னொரு மனைவியும் உள்ளார்.  தொடர்ந்த விசாரணையின் இறுதியில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். தற்பொழுது கொலைக்கான ஆயுதத்தினை கைப்பற்ற அவருடன் போலீசார் சென்றுள்ளனர்.

இவ்வாறு தும்ப்ரே தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.