ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மும்பையின் சாலைகளை சீர் செய்யக் கோரி மாநில தலைமைச் செயலக சாலையை உடைத்த நவ நிர்மாண்  சேனா 

பருவ மழையால் சீரழிந்துள்ள மும்பை சாலைகளை சீரமைக்கக்  கோரி மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) கட்சித் தொண்டர்கள், மாநிலத்தின் தலைமைச் செயலக சாலையை உடைத்து போராட்டம்...

News image
Updated On :17 ஜூலை 2018, 9:52 am

தினமணி

மும்பை: பருவ மழையால் சீரழிந்துள்ள மும்பை சாலைகளை சீரமைக்கக்  கோரி மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) கட்சித் தொண்டர்கள், மாநிலத்தின் தலைமைச் செயலக சாலையை உடைத்து போராட்டம் நடத்தினார்கள்.

சமீபத்தில் பெய்த பருவ மழையால் மும்பையில் சாலைகள் மோசமாக சீர்கேடு அடைந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனைக் விரைந்து சீர் செய்யக் கோரி மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறாரகள்.

அதன் ஒரு பகுதியாக திங்களன்று நவி மும்பை பகுதியில் அமைத்துள்ள பொதுப் பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட அக்கட்சித் தொண்டர்கள், அங்குள்ள நாற்காலிகள் மற்றும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.

இந்நிலையில் மும்பை சாலைகளை சீரமைக்கக்  கோரி மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள், செவ்வாயன்று மந்தராலயா பகுதியில் அமைந்துள்ள மாநிலத்தின் தலைமைச் செயலக சாலையை உடைத்து போராட்டம் நடத்தினார்கள்.          

இதுதொடர்பான விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 10 எம்.என்.எஸ் தொண்டர்கள் கையில் வைத்துள்ள சுத்தியல் மற்றும் இரும்புத் தடி உள்ளிட்ட ஆயுதங்களைக்கொண்டு  சாலையை அடித்து உடைக்கின்றனர்.

இதனால் மாநில அரசு விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டங்கள் தீவிரமாகும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.