பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மும்பையின் சாலைகளை சீர் செய்யக் கோரி மாநில தலைமைச் செயலக சாலையை உடைத்த நவ நிர்மாண்  சேனா 

பருவ மழையால் சீரழிந்துள்ள மும்பை சாலைகளை சீரமைக்கக்  கோரி மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) கட்சித் தொண்டர்கள், மாநிலத்தின் தலைமைச் செயலக சாலையை உடைத்து போராட்டம்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:45 pm IST

மும்பை: பருவ மழையால் சீரழிந்துள்ள மும்பை சாலைகளை சீரமைக்கக்  கோரி மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) கட்சித் தொண்டர்கள், மாநிலத்தின் தலைமைச் செயலக சாலையை உடைத்து போராட்டம் நடத்தினார்கள்.

சமீபத்தில் பெய்த பருவ மழையால் மும்பையில் சாலைகள் மோசமாக சீர்கேடு அடைந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனைக் விரைந்து சீர் செய்யக் கோரி மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறாரகள்.

அதன் ஒரு பகுதியாக திங்களன்று நவி மும்பை பகுதியில் அமைத்துள்ள பொதுப் பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட அக்கட்சித் தொண்டர்கள், அங்குள்ள நாற்காலிகள் மற்றும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.

இந்நிலையில் மும்பை சாலைகளை சீரமைக்கக்  கோரி மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள், செவ்வாயன்று மந்தராலயா பகுதியில் அமைந்துள்ள மாநிலத்தின் தலைமைச் செயலக சாலையை உடைத்து போராட்டம் நடத்தினார்கள்.          

இதுதொடர்பான விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 10 எம்.என்.எஸ் தொண்டர்கள் கையில் வைத்துள்ள சுத்தியல் மற்றும் இரும்புத் தடி உள்ளிட்ட ஆயுதங்களைக்கொண்டு  சாலையை அடித்து உடைக்கின்றனர்.

இதனால் மாநில அரசு விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டங்கள் தீவிரமாகும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.