மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புறப்பட்டுச் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.


மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புறப்பட்டுச் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
நாக்பூரில் இருந்து தில்லிக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர்.
ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்படும் முன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.உடனே இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விமானங்கள் நிற்கும் இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்து மத்திய அமைச்சர் கட்கரி உள்பட அனைத்து பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...