சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

தில்லியில் அமைகிறது இரண்டாவது பிளாஸ்மா வங்கி: மணீஷ் சிசோடியா

தலைநகர் புது தில்லியில் லோக் நாயக் மருத்துவமனையில் இரண்டாவது பிளாஸ்மா வங்கி அமைய உள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

News image

தில்லியில் அமைகிறது இரண்டாவது பிளாஸ்மா வங்கி: மணீஷ் சிசோடியா

Updated On :13 ஜூலை 2020, 8:52 am

ANI


புது தில்லி: தலைநகர் புது தில்லியில் லோக் நாயக் மருத்துவமனையில் இரண்டாவது பிளாஸ்மா வங்கி அமைய உள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

தில்லியில் இரண்டாவது பிளாஸ்மா வங்கியை லோக் நாயக் மருத்தவமனையில் அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இது விரைவில் செயல்படத் தொடங்கும் என்றும் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தில்லியில்தான் கரோனா பாதித்தவா்களுக்கு முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது. இந்தச் சிகிச்சையால் பலரும் குணமடைந்தனா். கரோனா பாதித்து உடல்நிலை மோசமடைந்த நிலையில் இருந்த தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு பூரண உடல்நலம் தேறினாா். 

இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சையை விரிவுபடுத்தும் வகையிலும், இலகுபடுத்தும் வகையிலும் தில்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று கேஜரிவால் கடந்த மாதம் அறிவித்திருந்தாா். அதன்படி, நாட்டின் முதலாவது பிளாஸ்மா வங்கி தில்லியில் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது.

தில்லி ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் இந்த பிளாஸ்மா வங்கியை, காணொலிக் காட்சி மூலம் கேஜரிவால் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், தில்லியில் தற்போது இரண்டாவது பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட உள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மீண்டு 14 நாள்களுக்கு எவ்வித கரோனா அறிகுறியும் இல்லாதவா்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். மேலும், 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 50 கிலோவுக்கு அதிகமான எடையுடையவா்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளவா்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது. கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தம், நீண்டகால சிறுநீரக, இதய, நுரையீரல், கல்லீரல் நோய்கள் இருப்பவா்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது. மேலும், கா்ப்பிணிகளும் தானம் செய்ய முடியாது.

பிளாஸ்மா தானம் செய்ய விரும்புபவா்கள் ‘1031’ என்ற இலவச எண்ணிலோ, 8800007722 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ததும், பிளாஸ்மா தானம் செய்ய தகுதியுள்ளவரா என்பதை உறுதிப்படுத்த மருத்துவா் ஒருவா் உங்களை அழைப்பாா். பிளாஸ்மாவை தானம் செய்ய 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஆகும். ரத்த தானம் பலவீனத்தை ஏற்படுத்தும். பிளாஸ்மா தானம் அப்படி அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.