திரிபுரா மாநிலத்தின் முதல் ஆக்சிஜன் பூங்காவை அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் கடந்த அக்-11 ஆம் தேதி திறந்து வைத்தார்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள சல்பாகனில் 29.6 ஹெக்டர் அளவில் ரூ.1.7 கோடி செலவில் அப்பகுதி மக்கள் ஆரோக்கியமான காற்றை சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் பூங்கா கட்டப்பட்டிருக்கிறது.
இப்பூங்காவில் 2 கிமீ தூரம் வரை நடக்ககூடிய வகையில் செயற்கைப் பாதை , திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடம் , குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் , பட்டாம்பூச்சி தோட்டம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது.
அப்பகுதி வனம் சார்ந்து இருப்பதால் வனத்தை சுற்றிப்பார்க்க பழங்குடிகளின் துணையுடன் செல்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் அரிய பூச்சிகள் , விலங்கினங்கள் , மூலிகைச் செடிகள் , மரங்கள் போன்றவையும் இருப்பதால் அப்பூங்கா முழுக்க சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வனத்தை பாதுகாப்பதற்காக சேவையாற்றிய முன்னாள் ஊழியர்களின் நினைவாக ‘வனஊழியர்கள் நினைவகம்’ என்கிற பெயரில் நினைவுக் கட்டடமும் திறக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



