விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஹிந்து ராஷ்டிரம் என அறிவியுங்கள், இல்லையெனில் ஜல சமாதிதான்: உ.பி. துறவி சர்ச்சை

அக்டோபர் 2-க்குள் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரம் என மத்திய அரசு அறிவிக்காவிட்டால், ஜல சமாதி ஆகிவிடுவேன் என ஜெகத்குரு பரமஹம்ச ஆச்சார்ய மகாராஜ் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :29 செப்டம்பர் 2021, 1:25 pm

DIN


அக்டோபர் 2-க்குள் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரம் என மத்திய அரசு அறிவிக்காவிட்டால், ஜல சமாதி ஆகிவிடுவேன் என ஜெகத்குரு பரமஹம்ச ஆச்சார்ய மகாராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அவர் கூறியதாவது:

"அக்டோபர் 2-க்குள் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரம் என அறிவிக்க வேண்டும். அதை நிறைவேற்றாவிட்டால் சரயு நதியில் ஜல சமாதி ஆகிவிடுவேன். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் தேசிய உரிமையை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்."

அயோத்தி துறவிகள் சமூகத்தினர் இதுபற்றி கூறுகையில், "ஆச்சார்ய மகாராஜ் கோரிக்கையை ஆதரித்து ஹிந்து சனாதன தர்ம மாநாட்டை நாங்கள் நடத்துவோம்" என்றனர்.

இவர் ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக 15 நாள்களுக்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த உத்தரவாதத்துக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு அனைவரும் தயாராகி வரும் நிலையில், இவரது கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.