ஓடும் ரயிலில் குழந்தைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு: உதவ போபால் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்
மருத்துவ சிகிச்சைக்காக சத்தீஸ்கரில் இருந்து தில்லிக்கு ரயிலில் சென்ற பிறந்து 26 நாள்களேயான குழந்தைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதையடுத்து, போபால் ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் ஆக்சிஜன் சிலிண்டா்களோடு வெள்ளிக்கிழமை நள்ளிரவு குவிந்தனா்.









