ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

கோவிஷீல்டு மருந்துகள் காலாவதியாகும் அபாயம்: தயாரிப்புப்பை நிறுத்தியது சீரம்

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுனமான இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

News image

கோவிஷீல்டு மருந்துகள் காலாவதியாகும் அபாயம்

Updated On :23 ஏப்ரல் 2022, 9:46 am IST


உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுனமான இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. தடுப்பூசியின் தேவை குறைந்து வருவதை அடுத்து கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டதாக நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவல்லா தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நூறு கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி டோஸ்களை தயாரித்துள்ள சீரம் நிறுவனம், போதிய தேவை இல்லாததால்
கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து டைம்ஸ் நெட்வொர்க் மீடியா குழு ஏற்பாடு செய்திருந்த பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய சீரம் நிறுவனம் தலைவர் ஆதார் பூனாவல்லா கூறியதாவது: 

"எங்களிடம் தற்போது 20 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் விற்பனையாகாமல் கையிருப்பில் உள்ளது. “அவற்றை என்ன செய்வது என்று தெரியவில்லை.  அவை காலாவதி ஆகிவிடும் என்பதால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கரோனா தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திவிட்டோம். கையிருப்பில் உள்ள தடுப்பூசி டோஸ்களை யார் வாங்கிக்கொள்ள முன் வருகிறார்களோ அவர்களுக்கு இலவச சலுகைகளை வழங்கவும் முன்வந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்த தேதியில் இருந்து ஒன்பது மாதங்கள் வரை பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் நூறு கோடி கணக்கான மக்கள் தடுப்பூசி போடப்படாமல் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். 

உலகில்  கரோனா பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடான இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் சுமார் 1,000 ஆக குறைந்திருந்த தினசரி தொற்று பாதிப்பு, கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து தில்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மக்கள் மீண்டும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.