பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கரோனா பாதிப்பு

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
பிகார் முதல்வர் நிதிஷ்குமார்
பிகார் முதல்வர் நிதிஷ்குமார்
Updated on
1 min read

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில், முக்கிய பிரமுகர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடந்த 4 நாள்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில் கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2-3 தினங்களாக முதல்வர் நிதிஸ் குமார் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கரோனா உறுதியானதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com