பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில், முக்கிய பிரமுகர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடந்த 4 நாள்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில் கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2-3 தினங்களாக முதல்வர் நிதிஸ் குமார் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கரோனா உறுதியானதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | அமலாக்கத்துறையில் 2-வது முறையாக சோனியா காந்தி ஆஜர்