பாஜக தலைமையிலான மத்திய அரசு பழிவாங்கும் அரசியலை செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கிப் பேசியுள்ளார்.
கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிய வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரௌத்துக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று (நவம்பர் 10) ஜாமீன் வழங்கியது. மேலும், சஞ்சய் ரௌத் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது எனவும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சிவசேனை எம்.பி.க்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதில் இருந்தே பாஜகவின் பழிவாங்கும் அரசியல் தெளிவாகத் தெரிவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மும்பை சிறப்பு நீதிமன்றம் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு எதிராக போடப்பட்ட வழக்கு சட்டவிரோதமானது என தெரிவித்து ஜாமீன் வழங்கியுள்ளது. விசாராணை அமைப்புகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை சட்டவிரோத வழக்குகளைப் பதிவு செய்ய பயன்படுத்தியுள்ளனர். சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத்தின் ஜாமீன் அனுமதியிலிருந்து பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் தெளிவாகத் தெரிகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கர்நாடகம்: கார் தீப்பிடித்ததில் முதியவர் பலி

டி20 உலகக் கோப்பை! கம்பீர், பும்ராவை பாராட்டிய தோனி!

கர்நாடகத்தில் சாத்தியமாகுமா "தலித்' முதல்வர் கனவு?

கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

