இண்டிகோ விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தில்லி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
தில்லியிலிருந்து பெங்களூருவுக்கு இன்று இரவு இண்டிகோ 6இ-2131 விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே வலது எஞ்சினில் தீப்பொறி கிளம்பியுள்ளது.
இதனைக் கண்ட விமானி, தில்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். தொடர்ந்து தில்லி விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தில் ஏற்பட்ட தீயை விமான நிலைய மீட்புப் படையினர் அணைத்தனர்.
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தில்லியிலிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் காரணத்தால் தில்லியில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். விரைவில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் தீ ஏற்பட்டதை தொடர்ந்து, தில்லி விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பிரிவினைக் குரல்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள்! பிகார் ஆளுநர்

Israel - Iran போர்ப் பதற்றம்: விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் Austria பயணி அவதி!

அல்லு அர்ஜுன் - அட்லி திரைப்பட டீசர் தேதி இதுவா?

மு.க. ஸ்டாலினுடன் பேசியது என்ன? - செல்வப்பெருந்தகை பதில்!
வீடியோக்கள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

