சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

குஜராத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? கேட்கிறார் கேஜரிவால்

பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, உங்கள் மாநிலத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று குஜராத் மக்களை கேட்டிருக்கிறார் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்.

News image

குஜராத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? கேட்கிறார் கேஜரிவால்

Updated On :29 அக்டோபர் 2022, 12:17 pm


பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, உங்கள் மாநிலத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று குஜராத் மக்களை கேட்டிருக்கிறார் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்.

குஜராத் மாநிலத்தில் யார் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும்? என்று ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று கேட்கப்பட்டது. அதில் ஏராளமானோர் பகவந்த் மான்-ஐ தேர்வு செய்தனர். அந்தக் கட்சியும் தேர்தலில் அபார வெற்றி பெற்று பகவந்த் மான் முதல்வர் ஆனார்.

சனிக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜரிவால், குஜராத் மாநிலத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது? என்று உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

குஜராத்தில் ஆளும் கட்சியை தாக்கிப் பேசிய கேஜரிவால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டமெல்லாம் பாஜகவிடம் இல்லை. பணவீக்கம் மிகப்பெரிய பிரச்னையாக நாடு முழுவதும் உள்ளது. குஜராத்திலும் இதே பிரச்னை இருக்கிறது. கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் முதல்வரை மாற்றினார்கள். ஆனால் அது பற்றி மக்களிடம் எதுவும் கேட்கவில்லை. நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம். எப்போதுமே ஆம் ஆத்மி மக்களின் கருத்துகளைக் கேட்கும். இப்போது, குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரும் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

உங்கள் கருத்துகளை 6357000360 என்ற எண்ணில் பதிவு செய்யலாம் என்றும், இந்த எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ், வாட்ஸ்ஆப், குறுந்தகவல் என எந்த வகையிலும் தொடர்பு கொண்டு நவம்பர் 3ஆம் தேதிக்குள் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் நவம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.