தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

விரைவில் தில்லி செல்லும் லாலு, நிதிஷ்!

முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாக தளம் தலைவர் லாலு பிறசாத்தும் தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க உள்ளதாக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 7:34 am

முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாக தளம் தலைவர் லாலு பிறசாத்தும் தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க உள்ளதாக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 

2024 மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இரு தலைவர்களும் சோனியாவைச் சந்திக்க உள்ளனர். சோனியா காந்தி தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் புது தில்லிக்கு திரும்பியதும் இந்த சந்திப்பு நிகழும் என்று தேஜஸ்வி கூறினார். 

முன்னதாக எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க நிதிஷ்குமார் தலைநகருக்குச் சென்றிருந்தார். ஆனால் சோனியா காந்தி இல்லாததால் அவரை சந்திக்க இயலவில்லை. பின்னர் ராகுல் காந்தியை நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார். 

கடந்த 2 நாள்களாக தில்லியிலிருந்த தேஜஸ்வி, திங்கள்கிழமை காலை பாட்னா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.