ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

வட இந்தியாவில் அடர்ந்த மூடுபனி, குளிர் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் வரும் நாள்களில் அடர்ந்த மூடுபனி மற்றும் குளிர் நிலைகள் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

News image
Updated On :1 ஜனவரி 2023, 10:17 pm IST


புதுதில்லி: பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் வரும் நாள்களில் அடர்ந்த மூடுபனி மற்றும் குளிர் நிலைகள் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தில்லியில் வாரத் தொடக்கத்தில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்திருந்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், திடீரென வெள்ளி, சனி ஆகிய நாள்களில் முறையே 10.7 டிகிரி, 10.2 செல்சியஸாக பதிவாகியிருந்தது.

நாட்டின் வடக்குப் பகுதிகளில் குறிப்பாக பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்திருந்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து மிகவும் அடர்ந்த மூடுபனி காணப்பட்டது, இதனால் ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில்,  தேசிய தலைநகரில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை மிதமான மற்றும் அடத்தியான பனிமூட்டமும் அதன் பின்னர் தெளிவான வானமும் காணப்பட்டது. அதே சமயம், காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. வெப்பநிலை மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. 

இதுகுறித்து  வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் வரும் நாள்களில் அடர்ந்த மூடுபனி மற்றும் குளிர் நிலைகள் தொடரும். ராஜஸ்தானிலும் குளிர் நிலைகள் தொடரும். 

திங்கள்கிழமை (ஜன. 2) காலை வேளையில் அடா்த்தியான மூடுபனியும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியைப் பொறுத்தவரை, ஜனவரி 3 ஆம் தேதி வெப்பநிலை மேலும் குறையும் மற்றும் குளிர் நிலை புதிய உச்சநிலையை அடையும் என தெரிவித்துள்ளது. 

தில்லியில் நாளை அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 மற்றும் 6 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.