ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுவதாக மாநில துணை முதல்வர் பிராவதி அறிவித்துள்ளார்
ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற சுதந்தி தினக் கொண்டாட்டங்களில் அந்த மாநில துணை முதல்வர் பிராவதி பரிதா கலந்துகொண்டார்.
அப்போது மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
இது சலுகையான அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் பொருந்தும். மாதவிடாய் நாள்களில் முதல் அல்லது இரண்டாவது நாளில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். இது அவரது விருப்பத்திற்கேற்ப என்றும் தெரிவித்துள்ளார்.
கென்யாவின் நைரோபியில் இந்தாண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சிவில் சொசைட்டி மாநாட்டில், ஒடிசாவைச் சேர்ந்த பெண்ணான பிரியதர்ஷினி மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு கோரி குரல் எழுப்பினார்.
மேலும், உலகெங்கிலும் உள்ள பெண்கள் மாதவிடாயின்போது ஏற்படும் உடல் வலியால் பாதிக்கப்படுவதாகவும் அவர் வாதிட்டார். இது சர்வதேச மாநாட்டில் அனைத்து பிரதிநிதிகளின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தியாவில் ஏற்கெனவே கேரளம், பிகார் மாநிலங்களில் மட்டும் தான் மாதவிடாய் விடுமுறை அமலில் இருந்தது. தற்போது மாதவிடாய் விடுப்பு வழங்குவதில் மூன்றாவது மாநிலமாக ஒடிசா திகழ்கிறது.
முன்னதாக, பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கினால் அவர்களை பணியிடங்களிலிருந்து ஒதுக்கிவைக்க வழிவகுக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு ரப்பா் கழக தற்காலிக தொழிலாளா்களுக்கு நிவாரணம்: எம்எல்ஏ தகவல்

மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு வழங்கக் கோரிய வழக்கு: ஆக.24-க்கு ஒத்திவைப்பு

ஊதியத்துடன் மாதவிடாய் கால விடுப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தகரும் ஊழல் கோட்டைகள்!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |






