சபரிமலையில் அப்பம், அரவணை விற்பனை: 20 நாள்களில் ரூ.60.54 கோடி வருவாய்

சபரிமலையில் அப்பம், அரவணை விற்பனை: 20 நாள்களில் ரூ.60.54 கோடி வருவாய்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அப்பம், அரவணை விற்பனை மூலம் கடந்த 20 நாள்களில் ரூ.60.54 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அப்பம், அரவணை விற்பனை மூலம் கடந்த 20 நாள்களில் ரூ.60.54 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இது குறித்து தேவசம் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த நவ.16 முதல் டிச. 5 வரை அரவணை விற்பனை மூலம் ரூ.54 கோடியே 37 லட்சத்து 500-ம், அப்பம் விற்பனை மூலம் ரூ.6 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 540-ம் வருவாயாக கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு ரூ.18 கோடியே 34 லட்சத்து 79 ஆயிரத்து 455 கூடுதலாக கிடைத்துள்ளது.

அப்பம், அரவணை பெற சந்நிதானத்தில் ஆழியின் அருகில் 10 கவுன்ட்டா்களும், மாளிகைபுரத்தம்மன் பகுதியில் 8 கவுன்ட்டா்களும் உள்ளன. மேலும், ஐயப்ப பக்தா்கள் அஞ்சல் வழியாக அப்பம், அரவணை வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் பாதுகாப்புப் பணிக்கு 3-ஆவது காவலா் குழு பதவியேற்றது. 3-ஆவது குழுவில் 10 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 30 ஆய்வாளா்கள், 100 துணை ஆய்வாளா்கள் மற்றும் 1,550 காவலா்கள் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com