இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தீர்வை நோக்கிப் பேச விவசாயிகள் முன்வர வேண்டும்: அர்ஜுன் முண்டா

விவசாய சங்க பிரதிநிதிகள் தீர்வு நோக்கி பேசுவதற்கு பதிலாக பிரச்னைகளை நோக்கி மட்டுமே விவாதிக்கின்றனர்.

News image
Updated On :14 பிப்ரவரி 2024, 3:14 pm

DIN

தீர்வை நோக்கிப் பேச விவசாயிகள் முன்வர வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒத்துழைத்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பொதுமக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது அரசின் நோக்கமாக உள்ளது.

புதிய சட்டங்கள் தொடர்பாக பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அடுத்தடுத்த நாள்களில் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

விவசாய சங்க பிரதிநிதிகள் தீர்வு நோக்கி பேசுவதற்கு பதிலாக பிரச்னைகளை நோக்கி மட்டுமே விவாதிக்கின்றனர். இது பொதுமக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முன்னெடுப்புகளை விவசாய சங்கங்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்தராய் ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.