கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சட்டப்பேரவைத் தலைவரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது: பிரியங்கா சதுர்வேதி

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை என்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று பிரியங்கா சதுர்வேதி கூறினார்.

News image
பிரியங்கா சதுர்வேதி (கோப்புப்படம்)
Updated On :11 ஜனவரி 2024, 10:56 am

DIN

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை என்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று பிரியங்கா சதுர்வேதி கூறினார்.

சிவசேனை (உத்தவ்) பிரிவைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது, “என்றென்றும் அவர்களே ஆட்சியில் இருக்கப் போவதில்லை. சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகரின் முடிவு துரதிர்ஷ்டவசமானது மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. 

இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் செய்யும் அநீதிகளை மகாராஷ்டிர மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இவை அனைத்திற்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.” என்று தெரிவித்தார். 

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விலகி தனி அணி அமைத்தனர்.

அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவின் மீது புதன்கிழமை தீர்ப்பளித்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனை என்று அறிவித்தார்.

சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகரின் தீர்ப்பை ஜனநாயகப் படுகொலை என்று உத்தவ் தாக்கரே விமர்சித்தார்.

முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தீர்ப்பளிப்பதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்று ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.