புது தில்லி: சாலை பாதுகாப்பே ஒரு அரசின் முதன்மையான கடமை எனவும் 2030 ஆம் ஆண்டுக்குள் சாலையில் நடைபெறும் விபத்துகளை 50 சதவிகிதம் அளவுக்கு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தொழில் அமைப்பான சிஐஐ ஒருங்கிணைத்த நிகழ்வில் பேசிய கட்கரி, பொறியியல் (சாலை மற்றும் வாகன தொழில்நுட்பம்), அமலாக்கம், கல்வி மற்றும் அவசர மருத்துவ சேவைகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலம் சமூக நடத்தையில் மாற்றம் ஏற்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டார்.
சாலை பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு அவர் தொழில் நிறுவன அமைப்புகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் 2022-ல் 4.6 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்ததாகவும் 1.68 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தியில் இதன் பாதிப்பு 14 சதவிகிதம் அளவுக்கு இருந்துள்ளது.
மேலும், 60 சதவிகிதம் விபத்துக்குள்ளாகுபவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிரடியும் அசுர பலமும்... இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கான மெய்நிகர் காலிறுதியில் வெல்லப்போவது யார்?

திருச்சி என்ஐடியில் டெக்னிக்கல் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஆப்கன் உடனான மோதல்! 331 தலிபான்கள் கொலை - பாக். அரசு அறிவிப்பு!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

