அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

சுகாதாரம், கல்வி குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை: சசிதரூர்

பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை என்றார் சசிதரூர்.

News image

நாடாளுமன்ற வளாகத்தில் சசிதரூர் - பிடிஐ

Updated On :23 ஜூலை 2024, 7:28 pm IST

பாஜக கூட்டணி வைத்துள்ள பிகார், ஆந்திர மாநிலங்களைத் தவிர்த்து, மக்களுக்கான சலுகைகள் பட்ஜெட்டில் எதுவும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பட்ஜெட் குறித்து கேரள மாநில எம்.பி. சசிதரூர் கூறியதாவது, மத்திய பட்ஜெட்டில் நிறைய அம்சங்கள் இடம்பெறவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

வருமானம் குறைவாக உள்ள 40 சதவீத மக்களின் வருவாயை உயர்த்துவது குறித்த எந்தவித தீவிர நடவடிக்கையும் பட்ஜெட்டில் இல்லை. சமத்துவத்தை நோக்கிய இதுபோன்ற அம்சங்கள் குறைவாகவே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

பாஜக கூட்டணி வைத்துள்ள பிகார், ஆந்திர மாநிலங்களைத் தவிர்த்து, மக்களுக்கான சலுகைகள் பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் வருமானம் குறைந்துள்ளது. அதற்கு என்ன செய்கிறார்கள்? பட்ஜெட்டில் மிகக்குறைவான அறிவிப்பு மட்டுமே உள்ளது என சசிதரூர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.