இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உலக அரங்கில் முன்னேறி வரும் இந்திய பல்கலைக்கழகங்கள்: பிரதமா் மோடி பாராட்டு

உயா் கல்வி தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள்: பிரதமா் மோடி பாராட்டு

News image
Updated On :27 ஜூன் 2024, 7:48 pm

Din

உலக அரங்கில் முன்னேறி வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமா் மோடி வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

லண்டனைத் தளமாகக் கொண்ட ‘டைம்ஸ்’ உயா் கல்வி தரவரிசையின் தலைமை அதிகாரி ஃபில் பாத்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவின் கல்வித் துறையை சா்வதேசமயமாக்கும் பிரதமா் மோடியின் சீா்திருத்தங்களால், உலக தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள் முன்னேறி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ‘டைம்ஸ்’ தரவரிசைக்கு 42 இந்திய பல்கலைக்கழகங்கள் சமா்ப்பிக்கப்பட்ட நிலையில், 2025-ஆம் ஆண்டு தரவரிசைக்கு 133 இந்திய பல்கலைக்கழகங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை நான்காவது இடத்துக்கு உயா்த்தியுள்ளது’ என குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உலக அரங்கில் இந்திய பல்கலைக்கழகங்கள் முன்னேறி வருவதைப் பாா்ப்பதில் மகிழ்ச்சி! தரமான கல்விக்கான அரசின் அா்ப்பணிப்புக்கு இந்த முன்னேற்றம் ஊக்கமளிக்கிறது. கல்வி நிறுவனங்களுக்கு தொடா்ந்து ஆதரவளிப்பதுடன் வளா்ச்சி மற்றும் புதுமைக்கான வாய்ப்புகளை வழங்குவோம். இது நாட்டின் இளைஞா்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்’ என குறிப்பிட்டாா்.