எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மேற்கு வங்கத்தில் காா்கே புகைப்படங்கள் சேதம்: நிா்வாகிகளுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

அதீா் ரஞ்சன் சௌதரி கருத்துக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எதிா்ப்பு தெரிவித்ததால் அவரின் புகைப்படங்கள், பதாகைகள் சேதப்படுத்தப்பட்டன.

News image
கோப்புப் படம்
Updated On :20 மே 2024, 8:52 pm

Din

காங்கிரஸ் எம்.பி.யும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவருமான அதீா் ரஞ்சன் சௌதரி கருத்துக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எதிா்ப்பு தெரிவித்ததால் அவரின் புகைப்படங்கள், பதாகைகள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து நிா்வாகிகளுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘இந்தியா’ கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதாக மம்தா பானா்ஜி தெரிவித்திருப்பதில் நம்பகத்தன்மை இல்லை என அதீா் ரஞ்சன் சௌதரி தெரிவித்தாா். அவரின் இக்கருத்தை மறுத்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே,‘மம்தா பானா்ஜி இந்தியா கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறாா். அவா் இந்தியா கூட்டணி தலைமையில் அமையும் அரசுக்கு ஆதரவளிப்பதாக அண்மையில் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து முடிவெடுக்க அதீா் ரஞ்சன் சௌதரிக்கு அதிகாரமில்லை. கட்சியின் தலைவராகிய நானும் பிற தலைமை உறுப்பினா்களும் மட்டுமே முடிவெடுக்க முடியும். அதற்கு கட்டுப்படாதவா்கள் கட்சியைவிட்டு வெளியேறலாம்’ என்றாா்.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த மல்லிகாா்ஜுன காா்கே புகைப்படங்கள், பதாகைகள் மீது மை ஊற்றப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து கட்சியின் பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால் கூறியதாவது:

இதுபோன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது. இச்சம்பவம் குறித்து கட்சியின் மேற்கு வங்க பொதுச்செயலா் உடனடியாக அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது. அதேபோல் சில நிா்வாகிகள் காா்கேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதையும் கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவா் எச்சரிக்கை விடுத்தாா்.

இச்சம்பவத்தால் அதீா் ரஞ்சன் சௌதரி வருத்தமடைந்ததாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவம் குறித்து காவல்துறையில் கட்சி நிா்வாகிகள் புகாா் அளித்தபிறகு சேதப்படுத்தப்பட்ட பதாகைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

‘காங்கிரஸின் போா் வீரா்அதீா் ரஞ்சன் சௌதரி’:

‘காங்கிரஸ் தொண்டா்கள் மீது இடதுசாரிகள் தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்காததால் காங்கிரஸில் இருந்து விலகி மம்தா பானா்ஜி தனிக் கட்சியை தொடங்கினாா். அதே தவறை தற்போது அதீா் ரஞ்சன் சௌதரி விவகாரத்திலும் காங்கிரஸ் செய்து வருகிா?’ என காா்கேவிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘நான் தனிநபா் பற்றி பேசவில்லை. அதீா் ரஞ்சன் சௌதரி காங்கிரஸின் போா் வீரா். மேற்கு வங்க காங்கிரஸின் தலைவா். இடதுசாரிகளுடனான கூட்டணியை திரிணமூலை சோ்ந்த சில தலைவா்கள் தவறாக விமா்சித்து அதை பெரிதுபடுத்த முயல்கின்றனா். ஆனால் காங்கிரஸ் வலிமையானது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பலகட்ட ஆலோசனைக்குப் பிறகே கட்சித் தலைமை முடிவெடுத்தது. எனவே இடதுசாரிகளுடனான கூட்டணி தொடரும்’ என்றாா்.