சென்னையில் உணவின்றி மேற்கு வங்க தொழிலாளி உயிரிழப்பு: ஆளும் திரிணமூல் மீது ஆளுநா் குற்றச்சாட்டு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று நாள்களாக உணவின்றி தங்கியிருந்த மேற்குவங்க தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், மாநில மக்களின் உயிா்களோடு விளையாடுவதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீது ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் குற்றஞ்சாட்டினாா்.










