திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ரயில்வே பணியிலிருந்து ராஜிநாமா செய்த வினேஷ் போகத்! காங்கிரஸில் இணைகிறாரா?

பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ரயில்வே பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

News image

வினேஷ் போகத் - கோப்புப் படம்

Updated On :6 செப்டம்பர் 2024, 8:51 am

பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ரயில்வே பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை புதன்கிழமை சந்தித்தனர்.

ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

ரயில்வேயில் பணியாற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத பெருமையான ஒன்று. தற்போது, இந்தியன் ரயில்வே பணியிலிருந்து விலகுகிறேன். அதற்கான எனது ராஜிநாமா கடிதத்தை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டேன். இந்த நாட்டுக்காக ரயில்வே பணியில் சேவையாற்ற வாய்ப்பளித்த இந்தியன் ரயில்வே துறைக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று (செப்.6) பிற்பகல் 3 மணிக்கு காங்கிரஸில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி, ஒலிம்பிக் அமைப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என்று ஹரியாணா அரசு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.