27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நாட்டை பிளவுபடுத்துகிறது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு

சிறுபான்மையினர் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2024, 6:41 pm IST

சிறுபான்மையினர் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். 

 நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஒருசிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 

பாஜக ஆட்சியில் 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு 4.8 கோடி வீடுகள்  கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

நாங்கள் பேசுவது எங்கள் சாதனையைப் பற்றி அல்ல; நாட்டின் வளர்ச்சி மற்றும் சாதனையைப் பற்றி பேசுகிறோம். பாஜக அரசு பெரிய குறிக்கோளுடன் கடுமையாக உழைத்து வருகிறது. 

காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்தை நம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மந்தகரமான வேகத்துடன் நாங்கள் போட்டியிடுவதில்லை. 

பாஜக 10  ஆண்டுகளில் கொடுத்த கேஸ் இணைப்புகளை காங்கிரஸ் கொடுத்திருந்தால் 60 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும். ரயில்வேத் துறையில் 10 ஆண்டுகளில் பாஜக செய்த வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் செய்துமுடிக்க 80 ஆண்டுகள் தேவைப்படும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால், பாஜக நிறைவேற்றிய திட்டங்களை நிறைவேற்ற 3 தலைமுறைகள் ஆகும். 

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வியூகம்  சிதறிவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை. காங்கிரஸ் கட்சி தனது இறுதிக்கட்டத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.