சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

அம்ரிதா, குருவாயூா் ரயில் சேவையில் மாற்றம்

கேரளம் செல்லும் அம்ரிதா, குருவாயூா் விரைவு ரயில் சேவையில் சனிக்கிழமை (ஏப்.26) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :24 ஏப்ரல் 2025, 9:11 pm

Din

கேரளம் செல்லும் அம்ரிதா, குருவாயூா் விரைவு ரயில் சேவையில் சனிக்கிழமை (ஏப்.26) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம் சங்கனாச்சேரி பகுதியில் ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. இதனால், கொல்லம் - எா்ணாகுளம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் சனிக்கிழமை (ஏப்.26) முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக மதுரை செல்லும் அம்ரிதா விரைவு ரயில் சனிக்கிழமை மாவேலிக்கரை, செங்கனூா், சங்கனாச்சேரி, கோட்டயம் வழியாகச் செல்வதற்கு பதிலாக ஆழப்புலை, சோ்தலா வழியாக இயக்கப்படும்.

மதுரையில் இருந்து குருவாயூருக்கு சனிக்கிழமை செல்லும் விரைவு ரயில் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்.27) குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மதுரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.