
ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையது அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.
இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தக் கலந்துரையாடலின்போது, இரு நாடுகளிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுவரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து தலைவா்கள் ஆராய்ந்தனா். மேலும், இரு நாடுகளின் மக்களும் பலன்பெறும் வகையில், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் பரஸ்பரம் உறுதியேற்றனா்.
இந்தியாவில் அதிக ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த இரண்டாவது பிரதமா் என்ற பெருமையைப் பெற்ற்காக பிரதமா் மோடிக்கு இந்தக் கலந்துரையாடலின்போது ஐக்கிய அரபு அமீரக அதிபா் பாராட்டு தெரிவித்தாா் என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.