குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி: ஆரன்முளாவில் இருந்து புறப்பட்டது!

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் பற்றி..

News image

மண்டல பூஜையில் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி

Updated On :23 டிசம்பர் 2025, 2:21 pm IST

சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜைக்காக, ஐயப்பன் சிலைக்கு அணிவிக்கப்படவுள்ள தங்க அங்கியை ஏற்திச் செல்லும் சடங்கு ஊர்வலம் ஆரன்முளா பாரத்தசாரதி கோயிலில் இருந்து இன்று தொடங்கியது.

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் சிறப்புப் பூஜை, வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஆரம்பம் முதலே பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத அளவில் இருந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உடனடி தரிசன முன்பதிவு முறையில் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், மண்டல பூஜை வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்குப் புறப்பட்டது. மலைக்கோவிலை நோக்கிய தங்கி அங்கி கொண்டுசெல்லும் பயணம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 453 சவரன் எடை கொண்ட இந்த தங்க அங்கி 1970-களில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தால் ஐயப்பனுக்குப் பரிசளிக்கப்பட்டதாகும்.

டிச.26ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி சன்னிதானம் வந்து சேரும். இதனை தொடர்ந்து தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடைபெறும். மறுநாள் மண்டல பூஜை, வழிபாடு நடைபெறும். அன்றைய தினம் தங்க அங்கி அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.

அன்றைய தினம் இரவு 11 மணியளவில் கோயில் நடை அடைக்கப்படும். அத்துடன் மண்டல பூஜை நிறைவடைகிறது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிச. 30ம் தேதி காலை மீண்டும் நடை திறக்கப்பட்டு, ஜனவரி 14 வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும்.

Summary

A ceremonial procession carrying the 'Thanka Anki' (the golden attire), to be adorned on Lord Ayyappa at Sabarimala for the auspicious Mandala Puja, commenced from the Aranmula Parthasarathy temple here on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.