கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்குத் தடை

நெடுஞ்சாலை விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை- கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2025, 2:38 pm

DIN

அதிக சாலை விபத்துகள் காரணமாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நெடுஞ்சாலை விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இருசக்கர வாகனங்களுக்கானத் தடையானது, பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையின் கர்நாடகத்திற்குட்பட்ட பகுதிக்கு மட்டும் பொருந்தும் என்றும் பின்னர் இது விரிவுபடுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்குட்பட்ட பங்கார்பேட் பகுதியில் பெங்களூருவில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த சொகுசுக் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மீதியது.

இதில் காரில் பயணம் செய்த இரண்டு வயது குழந்தை உள்பட மூன்று பேரும், இருசக்கர வாகனத்தில் வந்தவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சொகுசுக் காரில் பயணித்தவர்களில் படுகாயங்களுடன் உயிர் பிழைத்த 4 பேர் கோலார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையானது கடந்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் 48 கிலோ மீட்டருக்கான நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இச்சாலை முழுவதும் கர்நாடக மாநிலத்திற்குட்பட்டது.

எஞ்சிய 260 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை ஆந்திரம் வழியாக தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நிறைவு பெறுகிறது. இச்சாலையில் 120 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ரூ. 17,900 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தென்னிந்தியாவின் முதல் பசுமைவழிச் சாலை இது எனக் கூறப்பட்டது. இதன்மூலம் 7 மணிநேரப் பயணமானது மணிநேரமாகக் குறைந்துள்ளது.

நாளொன்றுக்கு 1600 முதல் 2000 வாகனங்கள் இச்சாலை வழியாகச் செல்வதாக தரவுகள் கூறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.