அதிக சாலை விபத்துகள் காரணமாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நெடுஞ்சாலை விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இருசக்கர வாகனங்களுக்கானத் தடையானது, பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையின் கர்நாடகத்திற்குட்பட்ட பகுதிக்கு மட்டும் பொருந்தும் என்றும் பின்னர் இது விரிவுபடுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்குட்பட்ட பங்கார்பேட் பகுதியில் பெங்களூருவில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த சொகுசுக் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மீதியது.
இதில் காரில் பயணம் செய்த இரண்டு வயது குழந்தை உள்பட மூன்று பேரும், இருசக்கர வாகனத்தில் வந்தவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சொகுசுக் காரில் பயணித்தவர்களில் படுகாயங்களுடன் உயிர் பிழைத்த 4 பேர் கோலார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையானது கடந்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் 48 கிலோ மீட்டருக்கான நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இச்சாலை முழுவதும் கர்நாடக மாநிலத்திற்குட்பட்டது.
எஞ்சிய 260 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை ஆந்திரம் வழியாக தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நிறைவு பெறுகிறது. இச்சாலையில் 120 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ரூ. 17,900 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தென்னிந்தியாவின் முதல் பசுமைவழிச் சாலை இது எனக் கூறப்பட்டது. இதன்மூலம் 7 மணிநேரப் பயணமானது மணிநேரமாகக் குறைந்துள்ளது.
நாளொன்றுக்கு 1600 முதல் 2000 வாகனங்கள் இச்சாலை வழியாகச் செல்வதாக தரவுகள் கூறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் ஒரே இரவில் 7 இடங்களில் விபத்து: விவசாயி உயிரிழப்பு

சிறுமி உள்பட 6 பேர் கொலை! போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெறிச்செயல்!

தாயில்பட்டியில் சொகுசு காா் கவிழ்ந்து விபத்து

பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்; வட மாநில இளைஞா் கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



