தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்குத் தடை

நெடுஞ்சாலை விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை - கோப்புப் படம்

Published On :5 மார்ச் 2025, 8:35 pm IST

அதிக சாலை விபத்துகள் காரணமாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நெடுஞ்சாலை விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இருசக்கர வாகனங்களுக்கானத் தடையானது, பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையின் கர்நாடகத்திற்குட்பட்ட பகுதிக்கு மட்டும் பொருந்தும் என்றும் பின்னர் இது விரிவுபடுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்குட்பட்ட பங்கார்பேட் பகுதியில் பெங்களூருவில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த சொகுசுக் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மீதியது.

இதில் காரில் பயணம் செய்த இரண்டு வயது குழந்தை உள்பட மூன்று பேரும், இருசக்கர வாகனத்தில் வந்தவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சொகுசுக் காரில் பயணித்தவர்களில் படுகாயங்களுடன் உயிர் பிழைத்த 4 பேர் கோலார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையானது கடந்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் 48 கிலோ மீட்டருக்கான நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இச்சாலை முழுவதும் கர்நாடக மாநிலத்திற்குட்பட்டது.

எஞ்சிய 260 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை ஆந்திரம் வழியாக தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நிறைவு பெறுகிறது. இச்சாலையில் 120 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ரூ. 17,900 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தென்னிந்தியாவின் முதல் பசுமைவழிச் சாலை இது எனக் கூறப்பட்டது. இதன்மூலம் 7 மணிநேரப் பயணமானது மணிநேரமாகக் குறைந்துள்ளது.

நாளொன்றுக்கு 1600 முதல் 2000 வாகனங்கள் இச்சாலை வழியாகச் செல்வதாக தரவுகள் கூறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.