வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

சென்னையில் பயிற்சி மைய ராணுவ அணிவகுப்பு: 133 புதிய அதிகாரிகள் நியமனம்

சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்திய ராணுவத்தில் நியமிக்கப்பட்டனர்.

X | Army Training Command

Published On :8 மார்ச் 2025, 9:33 am IST

சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்திய ராணுவத்தில் நியமிக்கப்பட்டனர்.

சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்த இராணுவ அணிவகுப்பு குறுகிய சேவை ஆணையம் மற்றும் அதற்கு சமமான அதிகாரிகளின் தேர்ச்சி விழா நடைபெற்றது. பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்திய ராணுவத்தில் நியமிக்கப்பட்டனர்.

இந்திய ராணுவத்தின் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் சேவைகளில் மொத்தம் 133 அதிகாரி பயிற்சி மாணவர்கள் மற்றும் 24 பெண் அதிகாரி பயிற்சி மாணவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, வெளிநாட்டைச் சேர்ந்த 5 வெளிநாடு அதிகாரி பயிற்சி மாணவர்களும், 7 பெண் வெளிநாட்டு அதிகாரி பயிற்சி மாணவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி சிறப்பாகப் பணியாற்றிய மாணவர்களுக்கு வாள், தங்கப் பதக்கங்கள், விருதுகளும் வழங்கப்பட்டன. தில்லியின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜான்சன் பி மேத்யூ முன்னிலையில், தேர்ச்சி பெற்று வெளியேறும் மாணவர்களின் அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

அணிவகுப்பைத் தொடர்ந்து, உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. உறுதிமொழியில், இந்திய அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் தேசத்தைப் பாதுகாப்பதாகவும் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.