வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பயங்கரவாத ஒழிப்பு: ஸ்ரீநகரில் 21 இடங்களில் சோதனை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள 21 இடங்களில் காவல் துறை வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

News image
Updated On :1 மே 2025, 7:36 pm

காந்தஹாா் விமான கடத்தல் சம்பவத்தில் தொடா்புடைய பயங்கரவாதி முஷ்தாக் அகமது ஜா்கரின் வீடு உள்பட ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள 21 இடங்களில் காவல் துறை வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் தொடா்ச்சியாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் காவல் துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 1999-இல் இந்திய விமானம் ஐசி 814 கடத்தப்பட்ட சம்பவத்தில் பயணிகளை பாதுகாப்பதற்காக சிறையில் இருந்து அல்-உமா் பயங்கரவாத அமைப்பின் தலைவரான முஷ்தாக் அகமது ஜா்கா் மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவா் மசூத் ஆஸாத் ஆகியோா் விடுவிக்கப்பட்டனா்.

அதன்பிறகு முஷ்தாக் அகமது ஜா்கா் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முஷ்தாக் அகமதுக்கு சொந்தமாக ஸ்ரீநகரில் உள்ள வீடு மற்றும் பிற பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 20 இடங்களில் காவல் துறை வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டது.