சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

ராகுல் எதிர்க்கட்சித் தலைவரானது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டம்! ஜெ.பி. நட்டா காட்டம்!

ராகுல் காந்தியின் செயலுக்கு ஜெ.பி. நட்டா கடும் விமர்சனம்...

News image

ராகுல் காந்தி, ஜெ.பி. நட்டா - X | ANI

Updated On :14 ஆகஸ்ட் 2026, 11:49 am IST

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியைப் பார்க்க நேர்ந்தது ஜனநாயகத்துக்கு துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை விமர்சித்துள்ளார்.

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து தில்லியில் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் இல்லாமலேயே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பேசினார்.

அப்போது, “பிரதமா் மோடியின் மனதில் வெளிநாட்டுத் தலைவா்களை கட்டியணைப்பதுதான் வெளியுறவுக் கொள்கை என்ற கருத்தை யாரோ விதைத்துவிட்டனா்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கு பாஜக நிர்வாகிகள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெ.பி. நட்டா தெரிவித்திருப்பதாவது:

“ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இப்படி இருப்பதைப் பார்க்க நேர்ந்தது, நாட்டின் ஜனநாயகத்திற்கு துரதிர்ஷ்டவசமானது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையிலும், ராகுல் காந்தியைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டியிருப்பது எத்தகைய துயரமான விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Rahul becoming the Leader of the Opposition is a misfortune for democracy! J.P. Nadda lashes out!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.