புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ராகுல் எதிர்க்கட்சித் தலைவரானது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டம்! ஜெ.பி. நட்டா காட்டம்!

ராகுல் காந்தியின் செயலுக்கு ஜெ.பி. நட்டா கடும் விமர்சனம்...

JP Nadda

ராகுல் காந்தி, ஜெ.பி. நட்டா - X | ANI

Published On :

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியைப் பார்க்க நேர்ந்தது ஜனநாயகத்துக்கு துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை விமர்சித்துள்ளார்.

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து தில்லியில் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் இல்லாமலேயே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பேசினார்.

அப்போது, “பிரதமா் மோடியின் மனதில் வெளிநாட்டுத் தலைவா்களை கட்டியணைப்பதுதான் வெளியுறவுக் கொள்கை என்ற கருத்தை யாரோ விதைத்துவிட்டனா்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கு பாஜக நிர்வாகிகள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெ.பி. நட்டா தெரிவித்திருப்பதாவது:

“ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இப்படி இருப்பதைப் பார்க்க நேர்ந்தது, நாட்டின் ஜனநாயகத்திற்கு துரதிர்ஷ்டவசமானது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையிலும், ராகுல் காந்தியைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டியிருப்பது எத்தகைய துயரமான விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Rahul becoming the Leader of the Opposition is a misfortune for democracy! J.P. Nadda lashes out!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.