இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஈரானுக்கு ஆதரவாக காஷ்மீரில் மாபெரும் போராட்டம்! இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக முழக்கம்!

ஈரானின் அரசுக்கு ஆதரவாக காஷ்மீரில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது குறித்து...

News image
கோப்புப் படம்
Updated On :16 ஜனவரி 2026, 3:20 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு இடங்களில், ஈரான் அரசுக்கு ஆதரவாக மக்கள் போராட்டங்கள் இன்று (ஜன. 16) நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் பொருளாதார நெருக்கடிகளால் அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில், இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஈரான் அரசுக்கு ஆதரவாக இன்று (ஜன. 16) காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஈரானின் இந்த நிலைக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசுகள்தான் காரணம் எனக் கூறி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

இதுபற்றி, போராட்டத்தில் ஈடுபட்ட ஜம்மு காஷ்மீரின் அஞ்சுமான் - இ- ஷரியே ஷியான் அமைப்பின் தலைவர் அகா சையத் ஹசன் அல் மூசாவி அல் சஃபாவி கூறியதாவது:

“ஈரானை பலவீனப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட தொடர்ச்சியான பொருளாதார அழுத்தம், ஊடகப் போர் மற்றும் தந்திரங்கள் அனைத்தும் கடந்த காலங்களில் தோல்வியடைந்தன. ஈரானின் உறுதி, விழிப்புணர்வு மற்றும் அசைக்க முடியாத எதிர்ப்பு ஆகியவற்றின் முன் அவை எதிர்காலத்திலும் தொடர்ந்து தோல்வியடையும்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி மீது நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் உள்ள மக்களுக்கு வாழ்த்துக்கள் எனவும், வெளிநாடுகளின் அழுத்தம், பிரசாரங்களுக்கு ஈரான் நாடு அடிபணியாது என்பதை அவர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.