
பிகார் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமருக்கு கடிதம்!
பிகார் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை வைத்துள்ளது குறித்து...

வெள்ளத்திற்கு மத்தியில் டிராக்டர்கள் - பிடிஐ
பிகார் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று (செப். 7) தெரிவித்தார்.
நான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். பிகாரின் கருவூலம் காலியாகிவிட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
ஓய்வூதியம் போன்ற வழக்கமான திட்டங்களுக்கான செலவுகளைச் செய்வதற்காகக் கூட, வெள்ளம் வருவதற்குச் சற்று முன்னதாகவே, அதாவது கடந்த ஜூன் மாதத்தில், பிகார் அரசு அவசரக்கால நிதியிலிருந்து ரூ. 4,000 கோடி எடுத்தது என்ற விஷயத்தை நான் தொடர்ந்து எழுப்பி வருகிறேன்.
அவசரக்கால நிதியிலிருந்து எடுக்கப்பட்ட அந்தப் பணத்திற்கான விலையை இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் துயரப்படுகிறார்கள்; அதனால்தான் நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
அந்தக் கடிதத்தில் நான் ஏழு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். பிகாரில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதும், மாநிலத்திற்கு ரூ. 5,000 கோடி மதிப்பிலான சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை வழங்க வேண்டும் என்பதுமே எனது முதல் கோரிக்கை எனக் குறிப்பிட்டார்.
Summary
Bihar be declared a national disaster RJD leader Tejashwi Yadav
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





