விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடுகளில் குடிநீர் தொட்டிகளில் அபெட் மருந்து முறையாக ஊற்ற தினக் கூலி அடிப்படையில் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் பா.ஜெயச்சந்திரசேகரன் தெரிவித்தார்.
பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை சனிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசுகையில் செயல் அலுவலர் ஜெயச்சந்திசேகரன் கூறியதாவது:
மம்சாபுரம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் மேற்பார்வையில் தினமும் அனைத்து வார்டுகளிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், கழிவு நீர் பாதை சுத்தப்படுத்துதல், பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளிலும் முறையாக அபெட் மருந்து ஊற்ற 10 பணியாளர்கள் தினக் கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியை மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செயல் அலுவலர் பா.ஜெயச்சந்திரசேகரன் தலைமையில், பேரூராட்சி தலைவர் ரா.ராஜா முன்னிலையில், துணைத் தலைவரும், அரசு வழக்குரைஞருமான ப.அய்யனார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் சென்றனர். பேரணி மம்சாபுரத்தின் அனைத்து வார்டுகள் வழியே சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் பேரூராட்சி சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
பேரணியில் பள்ளியின் தலைமை ஆசிரியை நி.அமுதா தங்கபூரணம், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் லட்சம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பயங்கரவாதத் தாக்குதல்? அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளி மாணவி கொலை!
பிலிம் கேமராவில் எடுக்கப்படும் ரஜினி - கமல் திரைப்படம்?
அமெரிக்காவிடம் அதிகளவு ஆயுதங்கள் உள்ளன; எப்போதும் போரிட முடியும்! டிரம்ப் மிரட்டல்!!

விரோஷ் திருமணத்தில் பங்கேற்ற சென்னை புகைப்படக் குழு! இதுவரை வெளியாகாத தகவல்!!
வீடியோக்கள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

