கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மனைவியின் வீட்டில் போய் ரூ.1 லட்சம் மதிப்புகளை சேதப்படுத்திய கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியின் வீட்டில் போய் அத்துமீறி நுழைந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களைச் சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத்

News image
Updated On :9 டிசம்பர் 2012, 5:30 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியின் வீட்டில் போய் அத்துமீறி நுழைந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களைச் சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள, கிருஷ்ணன்கோவில், எழில் நகரைச் சேர்ந்தவர் பா.தேவராஜ் (59). இவரது மகள் ஸ்டெல்லாவை, ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிஷோர்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னையை அடுத்து இருவருக்கிடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தேவராஜும் அவரது மனைவியும் வீட்டில் இருக்கும்போது, கிஷோர்குமார் மற்றும் இருவர் வீட்டினுள் கடப்பாறையுடன் அத்துமீறி நுழைந்து, ஆபாசமாக பேசி, கடப்பாறையைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். மேலும் வீட்டின் கதவு, ஜன்னல், மின் மீட்டர், மின்பெட்டி, டியூப்லைட்கள் முதலியவற்றை உடைத்து சேதப்படுத்தினார்களாம்.இது குறித்து தேவராஜ் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிஷோர்குமார் உள்ளிட்ட மூவரை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.