கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவிலி. அருகே லாரி கவிழ்ந்து 15 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரியின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 15 பேர் காயம் அடைந்தனர்

News image
Updated On :9 டிசம்பர் 2012, 5:31 pm

கோ.ஜெயக்குமார்

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரியின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 15 பேர் காயம் அடைந்தனர்.
வத்திராயிருப்பு-கோட்டையூர் சாலையில் செங்கல் சூளை வேலைக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை மேலக்கோபாலபுரம், ஆர்.சி.தெருவைச் சேர்ந்த சோமன் மகன் பிரபாகரன் (25) என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரியை டிரைவர் அஜாக்கிரதையாயும், அதிவேகமாயும் ஓட்டி வந்தாராம். இதனால் மகேந்திரன் பால்பண்ணை அருகே லாரி வந்த போது பின் பக்க டயர் வெடித்து கவிழ்ந்துள்ளது.
இதில் தமிழரசி (42), வளன்அரசு (எ) விஜயராஜ் (29), பேச்சி (30), ஜெயலட்சுமி (40), செல்வி (35), சூசையம்மாள்(27), லிங்கம்மாள் (40), தாமரை (24), அன்னபுஷ்பம் (40), தெய்வானை (32), வனப்பேச்சி (35), ராம்கி (48), வேளாங்கண்ணி (32), பாக்கியம் (52), சவரியம்மாளஅ (35) ஆகியோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மேலக்கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ராஜ் (33) என்பவர் வ்த்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழ்ககுப் பதிவு செய்து ராஜை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.