கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

காவிரி பிரச்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் 3 நாள் நீதிமன்ற புறக்கணிப்பு

காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள்

News image
Updated On :13 டிசம்பர் 2012, 6:36 am

கோ.ஜெயக்குமார்

காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் இரு நாள்கள் நீதிமன்ற புறக்கணிப்பும், வழககுரைஞர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து ஒரு நாளும், ஆக மொத்தம் 3 நாள்கள் வியாழக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிமன்றப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர், வழக்குரைஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர் வழக்குரைஞர் துரைசிங்கம். இவர் கிருஷ்ணன்கோவில் போலீஸ் சரகம், திருமலாபுரத்தில் குடியிருந்து வருகிறார். இவருக்கும் அண்டை வீட்டாருக்கும் உள்ள பிரச்னை தொடர்பான புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குரைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்குரைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாரைக் கண்டித்து வியாழக்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கம் முடிவு செய்தது.

காவிரி பிரச்னையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கம் முடிவு செய்தது.

இதன் பேரில் சுமார் 400 வழக்குரைஞர்கள் தங்களது நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் முடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.