அப்போது ஆடிப்பூர பந்தலுக்கு ஸ்ரீபெரியாழ்வார் எழுந்தருளி ஸ்ரீபெரியபெருமாள், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீஸ்ரீநிவாஸப் பெருமாள், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன், ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் திவ்ய தம்பதிகள் ஆகியோருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு ஐந்து கெருட சேவை நடைபெறும். ஏழாம் திருநாளான 3.8.16-ம் தேதி இரவு கிருஷ்ணன்கோவிலில் ஸ்ரீஆண்டாள் மடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெறும். ஒன்பதாம் திருநாளான 5.8.16-ம் தேதி காலை 8.05 மணிக்கு திருதேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.