துரிய தரிசனத்தில் கண்டமையால் மற்றைச் சரவணபவனைச் சமைக்கும் மானுடப் பிறவியாளன் 5116-ம் ஆண்டில் (2016), வலது கரத்தில் மூன்று மூலச் சக்கரங்களுடன் விளங்குவனாய் தசமாறு ஆண்டுகளில் 18 லட்சம் மூல மந்திரம் ஜெபித்து ராஜவேலர் சித்தவேலர் தமைச் சமைப்பான்.இந்த அருள்வாக்கின்படி 9+9 என பதிணென் பாஷாணமும், 18 மூலிகைகளும், 16 பஸ்பங்களும், கங்கை அலகாபாத்-திரிவேணி, மெய்கண்டார் குகை சுனை, பொதிகை, கல்யாணி தீர்த்தம், முக்கடல் தீர்த்தங்களோடு பஞ்சகவ்வியமாம் கோ-மூத்திரம், காடியுடன் சதுர்வேதம் குறிக்கும் நால்வகை மண்ணும் கூட்டி, மூன்று சிறார்களின் மூலம் ஸ்ரீபோகர்பிரான் வழிகாட்டுதலால் தலா இரு ராஜ அலங்கார முருகன், விநாயகர், சிவன் சிலைகளும், ஐயப்பன், ஆஞ்சநேயர், மீனாட்சி, வெங்கடாஜலபதி, மகாலட்சுமி சிலைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.இது குறித்து மகேஸ்வரன் கூறியதாவது: