‘உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை பயங்கரவாதம்’: மோடி
12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இன்றூ(செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.


12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இன்றூ(செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
ரஷியா அதிபர் புடின் அழைப்பின் பேரில், இன்று காணொளி மூலம் நடைபெற்ற 12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேசுகையில்,
உலகம் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையாக பயங்கரவாதம் உள்ளது. இந்தப் பிரச்னையை உரிய முறையில் கையாள பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை பொறுப்பேற்க செய்யவேண்டும் என கூறினார்.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி பேசினார்.
காணொளி முறையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பிரேசில் அதிபர் பொல்சனரோ ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...