நக்ரோட்டா தாக்குதல் குறித்து மோடி ஆலோசனை
நக்ரோட்டா தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார்.


நக்ரோட்டா தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நக்ரோட்டா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சென்றுகொண்டிருந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தினர். அப்போது வாகனத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்கத் தொடங்கினர்.
இதையடுத்து, சிஆர்பிஎஃப் படையினரும், காவல் துறையினரும் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் 2 காவலர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் மும்பை தாக்குதல் போன்ற ஒரு பெரிய தாக்குதல் சம்பவம் நிகழ்த்த வந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...