இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

சநாதன விவகாரம்: உதயநிதிக்கு ஜாமீன் வழங்கியது பெங்களூரு நீதிமன்றம்!

சநாதனம் குறித்து பேசியது தொடர்பான வழக்கில், அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

News image

பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி.

Updated On :25 ஜூன் 2024, 12:08 pm IST

சநாதனம் குறித்து பேசியது தொடர்பான வழக்கில், அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு செப். 2-ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சநாதன ஒழிப்பு மாநாட்டில், சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சா் உதயநிதி பேசியிருந்தார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

சநாதனம் பேச்சுக்கு எதிராக பரமேஷ் என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி இன்று(ஜூன் 25) ஆஜரானார்.

இந்த நிலையில், இவ்வழக்கில் அமைச்சர் உதயநிதிக்கு ரூ. 1 லட்சம் பிணைத்தொகையுடன் பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், இவ்வழக்கின் விசாரணையை ஆக. 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.