வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கனமழை, புயல் எச்சரிக்கை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு(நவ.30) மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கனமழை எச்சரிக்கை

Updated On :30 நவம்பர் 2024, 3:34 am

புயல் எச்சரிக்கை மற்றும் கனமழையைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு(நவ.30) மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயல் சனிக்கிவமை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு திசையில் நகர்ந்து சனிக்கிழமை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கும்.

புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழும்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.30 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சாவூர், சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 3 மணி நேரம் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகபட்டமாக கத்திவாக்கத்தில் 7 மி.மீ. மழைப்பதிவாகியுள்ளது. திருவெறஅரஊய்ர் 5 மி.மீ, தம்டையார்பேட்டை 4.6 மி.மீ, மணலி 4.2 மி.மீ பதிவாகியுள்ளது. சென்னையில் சராசரியாக 3.45 மி.மீ. மழைப்பதிவாகியுள்ளது.

திருவண்ணாமலை, தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு (நவ.30) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.