தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

வேட்டைக்குத் துணை சென்றவர் விலங்கு என நினைத்து சுடப்பட்டதில் பலி!

ஒடிசாவில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் வேட்டைக்குத் துணைக்கு சென்ற நபர் பலியானதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :24 பிப்ரவரி 2025, 1:09 pm IST

ஒடிசா மாநிலம் டேங்கானாள் மாவட்டத்தில் வேட்டைக்குத் துணை சென்ற நபர், வன விலங்கு என நினைத்து தவறுதலாக துப்பாக்கியால் சுடப்பட்டதில் பலியாகியுள்ளார்.

டேங்கானாளின் ஃபாசி கிராமத்தைச் சேர்ந்த பண்ணை உரிமையாளர் கோபிந்தா நாயக் (வயது 47), இவரும் அவரது உறவினரான ரமேஷ் நாயக் (45) என்பவரும் அங்குள்ள வனப்பகுதியில் அவ்வப்போது வேட்டைக்குச் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (பிப்.23) தனது பண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த கோபிந்தாவை அதிகாலை 2.30 மணியளவில் நாட்டுத் துப்பாக்கியுடன் அங்கு வந்த அவரது உறவினரான ரமேஷ் வேட்டைக்குத் துணைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து அங்குள்ள வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றுள்ளனர். காடுகளிலுள்ள புதருகளினுள் ஏதேனும் விலங்குள ஒளிந்திருக்கக் கூடும் என்பதினால் அந்த புதருகளின் கிளைகளை பிடித்து உலுக்குமாறு ரமேஷ் கூறியதினால், கோபிந்தாவும் புதருகளை உலுக்கியவாறு சென்று கொண்டிருந்தார்.

சில அடி தூரம் கடந்ததும் செடிகள் உரசும் சத்தம் கேட்டதினால் விலங்கு என்று நினைத்து அந்த திசையை நோக்கி ரமேஷ் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது, அதில் ஒரு குண்டு எதிர்பாராத விதமாக கோபிந்தாவின் நெஞ்சில் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கு சென்று ரமேஷ் பார்த்தபோது கோபிந்தா ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக, தங்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோபிந்தாவை மீட்டு அப்பகுதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், கோபிந்தாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.