காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ: ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

விராலிமலை தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் மட்டைகள் எரிந்து நாசமானது.

News image
தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்.
Updated On :7 மார்ச் 2025, 4:19 am

DIN

விராலிமலை தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் மட்டைகள் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள ஆண்டியப்பிள்ளை பட்டியில் ஆர். எஸ். ஆர் என்ற பெயரில் தேங்காய் நார் உரித்து கயிறு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வெளிச்சந்தைகளில் இருந்து தேங்காய் மட்டைகள் வாங்கி அதை இயந்திரம் மூலம் நாராக்கி அதன் மூலம் கயிறு தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் சேமித்து வைக்கபட்டிருந்த தேங்காய் மட்டைகள் வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பற்றியுள்ளது. தீ மள மளவென்று தொழிற்சாலை முழுவதும் பரவி எரியத்தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அங்கிருந்த தொழிலாளர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலையிலான வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இருப்பினும், தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் ஒரு தீயணைப்பு வாகனத்தை அனுப்புமாறு கீரனூர் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு கூறியதை தொடர்ந்து அங்கிருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வந்ததைத் தொடர்ந்து இரண்டு வண்டிகளில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக விடிய விடிய போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் மூலப்பொருள்கள், தேங்காய் மட்டைகள், மின் மோட்டார், கன்வேயர் பெல்ட் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.