அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!

இந்தியா - வங்கதேச எல்லையில் கால்நடைகள் கடத்தப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2025, 9:42 pm IST

மேற்கு வங்கத்திலுள்ள இந்தியா - வங்கதேசத்தின் எல்லையில் 16 கால்நடைகள் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மால்டா மாவட்டத்தின் எல்லைப் புறக்காவல் நிலையத்தில் நேற்று (மார்ச் 24) நள்ளிரவு இந்தியப் பகுதியிலிருந்து வங்கதேசம் நோக்கி 3 முதல் 4 நபர்கள் கால்நடைகளைக் கடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் விரைந்த போது அவர்கள் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, பாதுகாப்பான தொலைவிலிருந்து அவர்களை நோக்கி அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால், அவர்கள் கொண்டு வந்த கால்நடைகளை அங்கேயே விட்டுவிட்டு அந்த நபர்கள் அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் அங்கிருந்து 7 கால்நடை விலங்குகள் மீட்கப்பட்டு எல்லைப் புறக்காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. மேலும் 5 கால்நடை விலங்குகள் அங்கு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்தியா - வங்கதேச எல்லையில் அமைந்துள்ள நதியா மாவட்டத்திலுள்ள எல்லைப் புறக்காவல் நிலையத்தில் கடத்தப்பட்ட 5 கால்நடை விலங்குகளையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

அதே இடத்தில் நடந்த மற்றொரு சோதனையில் எல்லைக் காவலர்கள் தடைசெய்யப்பட்ட இருமல் மருந்து அடங்கிய 851 பாட்டில்கள் மற்றும் 12.15 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.