பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டில் நேர்ந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை...

News image
கோப்புப் படம்
Updated On :28 மார்ச் 2025, 4:42 pm

DIN

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத் தீயானது வடக்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள உய்சோங் நகரத்தைச் சேர்ந்த மதிக்கத்தக்க நபர் ஒருவரால்தான் உண்டாகியிருக்கக் கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகிக்ககின்றனர்.

இந்நிலையில், உய்சோங் நகரத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த மார்ச் 22 அன்று அங்குள்ள மலைக்குன்றின் மீதுள்ள அவரது குடும்பக் கல்லறையில் செய்த சடங்கின்போது பற்ற வைத்த நெருப்பினால் இந்தக் காட்டுத் தீயானது உண்டாகியிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தென் கொரிய காவல் துறையினர் அந்நபரின் மகளிடம் முதற்கட்ட விசாரணையை தற்போது மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் அவரிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் தற்செய்லாக காட்டுத் தீ உண்டாக்குபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் 30 மில்லியன் வான் (20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) மதிப்பிலான பணம் அபராதமாக விதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

முன்னதாக, தென் கொரியாவில் நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றினால் தொடர்ந்து பரவிய இந்தக் காட்டுத் தீக்கு 24-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 37,000-க்கும் மேற்பட்டோர் இடமாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.